வியாழன், 30 ஏப்ரல், 2009

கருணாநிதி அன்றும் இன்றும்


கல்லுக்குடி கொண்டாய் அன்று
காங்கிரஸ் "குடி" சென்றாய் இன்று

அண்ணா என்ற மூன்றெழுத்து அன்று
"ஆட்சி" என்ற மூன்றெழுத்து இன்று

தமிழ் உயிர் மூச்சு அன்று
மூச்சுக்குத் தமிழ் இன்று

கழகக் குடும்பத்தின் தலைவர் அன்று
கலகக் குடும்பத்தின் தலைவர் இன்று

சீறாமலே சிங்கம் என்றார் அன்று
சீறினாலும் சீண்டுவார் இல்லை இன்று

வீர வசனம் அன்று
மௌன மொழி இன்று

காலம் உன் கையில் அன்று
காலத்தின் கையில் நீ இன்று

1 கருத்து: