![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm__L6WsuEadq4ki_lRVddT8XY8vAoKYJXX9k-f8y5EYzn1Xdjhtw7wpgsBAu0Uv2yfAgJq7hKXGyp8TCdh2YCMKVv25sPMLFQw_-QkFdZADjapWcl6yV2Tol70xlhdW_ikocXX1IkIRg/s400/Friends-Logo-FullColor.jpg)
நிகரில்லா நண்பர்கள் கொடுத்த
இறைவனுக்கு நன்றி என்றேன்.
நன்றி சொல்லி நழுவாதே என
பொறாமையாகப் பார்த்த இறைவன்
வரம் ஒன்று வேண்டுமெனக் கேட்டான்.
கொடுப்பவன் கேட்க என்னிடம்
என்ன இருக்கிறது என்று நினைக்கையில்
உன் நண்பர்கள் குழுவில் சேர
அவர்களை அறிமுகப்படுத்து என்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக