![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhScQbdzL4lyP15na5jWKwPl5snKA_To6mIot0QuULrkkJ3yKsQVmclFlz3JkTLMqFTLCiUiOd1qHSOfdKHt7C2MdAn_XGyyUeFYQ9czVur_Ek-VkSdo73GgVMHpdmVdNE2rr0pUuYUkCA/s320/veena.jpg)
மீட்டப்படாத வீணையின்
அருகில் அன்புடன்
படுத்திருந்தது - பூனை
எங்கு சுற்றினாலும் வந்துவிடும்
எனக் காத்திருக்கும் வீணை
மடியில் வைத்து
நெஞ்சோடு அணைத்து
விரல்களின் விளையாட்டில்
அருவியாகப் பாய்ந்த
நாதத்தின் சுவை உணர்ந்த
நாட்கள் தான் எத்தனை
இன்று மீட்கப்படாமல்
இருக்கும் வீணையைப் பற்றி
செய்தவன் கேட்டு வருந்தினான்.
மீட்ட காலங்களில் காற்றில்
மிதந்திருக்கும் நாதம்
இன்று வீணைக்கு மட்டும்
கேட்கிறது.
நாதமும் பூனையுமாக
கழியும் வீணையின் வாழ்க்கை.
excellent!
பதிலளிநீக்கு