வியாழன், 4 ஜூன், 2009

டின்னமன் சதுக்க (Tiananmen Square) நினைவு நாளும் இலங்கையில் தமிழர்களின் நிலைமையும்


சீனாவில் டின்னமன் சதுக்கத்தில் (Tiananmen Square) 20௦ ஆண்டுகளுக்கு முன் நடந்த அடக்கு முறையில் பல மாணவர்களும், பொது மக்களும் கொல்லப் பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அங்கு உண்மையில் நடந்தது என்ன என்று இன்று வரை அதிகாரப் பூர்வமான தகவல் சீன அரசிடம் இருந்து வெளிவரவில்லை.மேலும் இந்த நினைவு நாளை கொண்டாடும் விதமாக மீண்டும் எந்த எழுச்சியும் ஏற்படாமல் இருக்க ஹாட்மைல்,ட்விட்டேர்,பின்கு மற்றும் பிலிக்கர் முதலிய தளங்களை சீனாவில் யாரும் உபயோகப் படுத்தமுடியாமல் அங்குள்ள அரசு தடுத்திருக்கிறது.
கடந்த 20௦ வருடங்களில் தான் எத்தனை மனிதபிமானமில்லாத அடக்கு முறைகள் உலகத்தில் பல அரசாங்கங்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ருவண்டா,போஸ்னியா,ஈராக்,டார்பார்,கொண்டனமோ பே, மற்றும் சமீபத்தில் இலங்கை. இவைகள் எல்லாம் செய்திகளாக வந்து போகின்றன.மனித இனமும் இதை எல்லாம் பொறுத்துக் கொண்டும்,ஜீரணித்துக் கொண்டும் வாழ்கையைத் தொடர்கின்றன.
போ டோங் (Bao Tong) என்ற மனித உரிமை பாதுகாவலர் மற்றும் ஜனநாயக விரும்பி 1989ம் ஆண்டு டின்னமேன் சதுக்கப் போராட்டத்தில் பங்கு கொண்ட முதன்மையானவர்களில் ஒருவர்.இந்த நினவு நாளை ஒட்டி அவர் ஆசைப் படும் விஷயங்களை பட்டியலிடிருக்கிறார்.

1. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக வந்து சீனாவில் மக்களைப் பேட்டி எடுக்கும் நிலை வரவேண்டும்.
2. நிலத்தை இழந்த விவசாயிகள் வக்கீல்களின் உதவி கிடைக்கப் பெற்று தங்கள் உரிமையை நிலை நாட்ட வழி வகுக்க வேண்டும்.
3. சீனாவின் கம்யூனிஸட் கட்சி பெரும்பான்மையர்களின் முடிவுக்குக் கட்டுப் படுவதை செயல் படுத்த வேண்டும்.
4. குறிப்பாக 1989ம் ஆண்டு போராட்டத்தில் பங்கு கொண்டு தவறு இழைக்கப் பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.
இறுதியில் போ கூறுகிறார் "எனக்குப் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை" என்று.



இலங்கையில் இன்றுள்ள நிலைமையும் இதே தான்.போ ஆசைப்படும் அதே நிலை இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ஏற்படவேண்டும்.
பத்திரிகையாளர்களும்,மனிதாபிமான உதவிக் குழுக்களும் போரில் பதிக்கப் பட்ட இடத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
தமிழர்கள் இனி மேலாவது சுதந்திரமாக வாழ வகை செய்ய வேண்டும்.
வேலிக்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
உண்மையாக பேரழிவு நாளன்று என்ன நடந்தது என்பதை உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
எல்லா தமிழர்களையும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
இதெல்லாம் நடக்குமா? போ போல் எனக்கும் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. உங்களில் யாருக்காவது இந்த நம்பிக்கை உண்டா?

3 கருத்துகள்:

  1. நம்பிக்கைதானே வாழ்கை..
    நல்லப்பதிவு.. தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் உங்களை போல பெரிய நம்பிக்கை இல்லை பாஸ்கர்... பார்ப்போம்.. நல்லது ந்டக்க வேண்டுவோம் :)

    பதிலளிநீக்கு