செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

உலகக் கோப்பை - நினைவுகளில் III


வாழ்வில் ஆச்சிரியம் கலந்த சந்தோஷம் கைகூடி வரும் நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.அப்படிப் பட்ட ஒரு நாள் தான் இந்தியா 1983 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற நாள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத "பொன்" நாள். அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை என்பதல்லாம் இன்று வரலாற்றின் மற்றொரு பகுதி. இப்போது மூன்றாவது ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய வெற்றிக்கான காரணிகளையும் மற்றும் வேறு சில முக்கிய நிகழ்வுகளையும் பார்க்கலாம்.

1. இங்கிலாந்தில் போட்டி நடை பெற்றது.

2. இந்திய அணியின் ஒரு நாள் போட்டி மனப்பான்மையில் கபில் தேவினால் கொண்டு வரப்பட்ட மாறுதல்கள்.

3.மதன் லால்,பின்னி,அமர்நாத் மற்றும் பல்விந்தர் சந்து முதலான மித வேகப் பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச்சில் இங்கிலாந்தின் தட்ப வெப்ப நிலை மிகவும் உதவியது.

4. யஷ்பால் ஷர்மா வெஸ்ட் இண்டீசுடனான முதல் போட்டியில் மிக அருமையாக விளையாடி வெற்றிக்கு வழி வகுத்தார்.

5. கபில் தேவின் ஆட்டமிழக்காத 175 ஓட்டங்களும், இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸை அவுட் ஆக்க 20 அடிகள் ஓடி அவர் பிடித்த கேட்சும் மறக்க முடியாதவைகள்.




6. சந்தீப் பாட்டில் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 32 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.



7. இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் அடித்த 38 ரன்கள் என்றுமே உலகக் கோப்பை இறுதி
ஆட்டத்தில் விளையாடிய ஒரு முக்கியமான இன்னிங்க்ஸ்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

8. சந்துவின் பந்து வீச்சில் கிரீனிட்ஜ் இறுதி ஆட்டத்தில் தவறாக கணித்து விளையாடி ஆட்டமிழந்தது ஓர் அதிசியம் தான்.

9. இரண்டு உலகக் கோப்பைகள் வெல்வதற்கு காரணமாக இருந்த வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ், இந்த முறை அதன் தோல்விக்கு காரணமானார்.



10.மொஹிந்தர் இந்த தொடர் முழுவதும் நல்ல மட்டையாளராகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் பரிமளித்தது இந்திய வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்கியது.

11.இதைத் தவிர ரிச்சர்ட்ஸ் பாகிஸ்தானுடன் அரை இறுதி ஆட்டத்தில் அடித்த 80 ரன்கள் இந்தக் கோப்பைப் போட்டியில் மிகச் சிறந்த ஆட்டம் என்றால் மிகையாகாது.




12. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது கபில் தேவின் விடா முயற்சி, அணிக்கு கொடுத்த உத்வேகம் மற்றும் சிறப்பாக அணியை வழி நடத்தி சென்ற விதம்.

இதுவரை நடந்த உலகக் கோப்பையைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன், ஆனால் இன்னும் இரண்டு நாட்களில் 2011 உலகக் கோப்பைப் போட்டியே ஆரம்பமாகப் போகிறது. அதனால் இந்தத் தொடரை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2003 ஆண்டு தான் இந்தியா மீண்டும் கோப்பையை வெல்ல ஒரு வாய்ப்பிருந்தது. அது மட்டமான பந்து வீச்சினால் நடவாமல் போனது. இந்த முறையாவது இந்தியா வெல்ல வாய்ப்புள்ளதா? நேற்று நடந்த ஆஸ்திரேலியா-இந்தியா ஆட்டத்தில், இந்தியா வெற்றி பெற்றாலும் நன்றாக விளையாடவில்லை. மேலும் இதைப் பற்றி வரும் பதிவுகளில் ஆராய முயற்சிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக