வியாழன், 27 செப்டம்பர், 2012

ஒரு கணிதக் கவிதை

மிக எளிய  கணிதக் கோட்பாட்டை பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தக்
கவிதையைப் படித்தேன்.(http://mathematicalpoetry.blogspot.com/) அதனை தமிழிலும் மொழி பெயர்க்க முயற்சித்தேன். ஆனால் மூலத்தின் இனிமையை என்னால் அடைய முடியவில்லை(என் நண்பர் உதவி செய்தும்). இருந்தாலும் இரண்டு விதமான  தமிழின் மொழி பெயர்ப்பைக் கொடுத்துள்ளேன். உங்களால் அதைச் செம்மைப் படுத்த முடிந்தால் பகிர்ந்து கொள்ளவும். கவிதை இங்கே.

 Outside, cold rain
maps a deep night's constants
around a (couple)^0    

x ^௦ = 1 என்ற மிக எளிய, அறிமுகக் கணிதத்தை பயன்படுத்தி கவிதைக்கு மேருகேற்றியுள்ளார்  கவிஞர். அதாவது எந்த ஒரு எண்ணின் அடுக்குக்குறியும் பூஜ்யமாக இருக்கும் போது அதன் மதிப்பு ஒன்றாகும்.


தமிழில்:

வெளியே, குளிர் மழை

(ஜோடி)^Oவைச் சுற்றி

அடர் இரவின் மாறிலிகள் வரையும் 

அல்லது

வெளியே, குளிர் மழை


வரையும் ஓர் அடர் இரவின் மாறிலிகள்

(ஜோடி)^Oவைச் சுற்றி

 மழை பெய்யும் போது அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஓர் அலாதி அனுபவம். அதுவும் குளிருடன் கூடிய மழையெனில் கேட்கவே வேண்டாம். தனிமையில் சூடான டீ அல்லது காபி குடித்துக் கொண்டே இனிமையான இசையுடன் ஒன்றரக்  கலந்து மழையை ரசித்தல்....இது ஒரு புறம்.

எந்த ஓர் அடர் இரவிலும் தனிமையும், பயமும் மாறாத தன்மை கொண்டவைகள்.அதில் துணையுடன் இணைந்து  மகிழ்வது .....மற்றொரு வகை ஆனந்தம்.

மழையே பனிமழையாக இருந்திருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும். கற்பனைக்கு எல்லை ஏது?

3 கருத்துகள்: