ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

உன்னதக் கலைஞன் நாகேஷ்




நாகேஷ் என்ற குண்டு ராவ் மறைவு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.எத்தனை கோடி மக்களை சிரிக்க வைத்திருப்பார்.தன் சொந்த வாழ்கையில் பல துயரங்கள்.தாராபுரம் இவர் ஊர்.அங்குள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு பத்து நாட்கள் நடக்கும் வருட விழாவின் போது பல ஆண்டுகள் இவர் முதல் நாள் ஆகும் செலவை ஏற்றிருக்கிறார்.

நாகேஷின் திரை நடிப்பு இரண்டு வகை.ஒன்று நகைச் சுவை.மற்றொன்று குண சித்திரம்.நீர் குமிழி,எதிர் நீச்சல்,சர்வர் சுந்தரம்,தில்லான மோகனம்பாள் ஒரு வகை.இவருடைய குண சித்திர நடிப்பிற்கு பெருமை சேர்த்தது.காதலிக்க நேரமில்லை,திருவிளையாடல்,ஆயிரத்தில் ஒருவன்,தேன்மழை போன்றவை இவருடைய நகைச் சுவை நடிப்பின் திறமையை உலகிற்கு பறை சாற்றியது.இன்றும் அந்த நகைச சுவை காட்சிகளை பார்த்தாலோ,கேட்டாலோ கவலையை மறந்து சிரிக்கலாம்.மனோரமாவுடன் இவர் நடித்த நகைச் சுவை காட்சிகள் மனதிலிருந்து நீங்காதது.

இவருடைய குண சித்திர நடிப்பை வெளிக் கொணர்ந்த கே.பாலச்சந்தர் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்."மாது வந்திருக்கிறேன்"என்று ஏதிர் நீச்சல் படத்தில் தன் வறுமையை வெளிப்படுத்தி அதே நேரத்தில் படிப்பை தொடர்ந்து வெற்றி பெறுவது இன்றும் சிலர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சியாக காணலாம்.தமிழ் சினிமாவில் கல்யாண பரிசு தங்கவேலு,திருவிளையாடல் தருமி காலத்தால் அழிக்க முடியாத நகைச்சுவை காட்சிகள்.

தமிழ் திரை உலகில் இவருடைய நகைச் சுவை நடிப்பிற்கு வாய்ப்பு குறைந்த நேரத்தில் கமலஹாசன் தான் இவருக்கு நல்ல வேடங்கள் கொடுத்து இவர் திறமையை நான்கு உபயோகபடுத்தினார்.அதற்கு கமலை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்த உன்னதக் கலைஞன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக