புதன், 26 நவம்பர், 2008

அறிக்கைகளும் ஆர்பாட்டங்களும்

14-Oct-2008

இன்று இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் உள்ள அரசியலை வூடகங்கள் மூலம் படிக்கும் போதும், பார்க்கும் போதும் கற்பனையில் உதித்த பேட்டிகளையும், அறிக்கைகளையும் மன வேதனையுடனும், நகைச்சுவையுடனும் பகிரிந்து கொள்கிறேன்.

தமிழகத்தில் மின்வெட்டு 'கட்': ஆற்காடு வீராசாமி அறிவிப்பு

இயற்கையின் சதியால் தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி நின்றது என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் தமிழ் நாட்டில் மின்வெட்டு இருக்காது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இருண்ட தமிழகம்: ஜெயலலிதா அறிக்கை

என் ஆட்சியில் 'பிரகாசமாக ஒளி வீசி மின்னிய" தமிழகத்தை இருண்ட தமிழகமாக மாற்றிய கையாலாகாத ஆற்காடு வீராசாமியையும், நயவஞ்சக கருணாநிதியின் அரசையும் கண்டித்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டி என்ற கிராமத்தில் அ.தி.மு.க மிகப் பெரிய போராட்டத்தை வரும் அக்டோபர் 22ம் நடத்தும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஜெயலலிதாவைக் கண்டித்து கருணாநிதி உருக்கமான கவிதை

ஆற்காடார் அறிவித்தது புரிந்தும்
புரியாதது போல் - பொறாமையில்
பிதற்றும் பேதையே
இரவில் மட்டுமே மின்வெட்டு
பகலிலோ சுட்டெரிக்கும் நமது சூரிய ஒளியை
இலவசமாக எல்லா தமிழ் மக்களுக்கும் பகிர்தளித்து
மின்வெட்டு இல்லா மாநிலமாக்கி
பார் புகழ நடாத்திச் செல்லும்
அரசை ஆன்றோரும், சான்றோரும் பாராட்ட
கண்டிக்கப் புறப்பட்ட
நயவஞ்சகியே, நாசக்கார அம்மையே
கலங்காது இந்த மனம்
வீழாது தமிழ் இனம் - உன் சூழ்ச்சிக்கு
இந்நாளும் மறந்திருந்த இலங்கை
இனப் படு கொலை கண்டித்து
யாம் போராடத்துடிக்கும் போது
தமிழ் நெஞ்சங்களை திசை மாற்றும்
தரம் கெட்ட உன் இழிச் செயலை
தகர்த்தெறிவோம் தடைகளை களைவோம்
உயிரை துச்சமாக மதிப்போம் - பொருத்தது போதும்
பொங்கியெழு உடன்பிறப்பே

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


இலவச "லாந்தர்" : கருணாநிதி பேட்டி

மின்சார உற்பத்தி நின்றதால் இரவில் அவதியுறும் தமிழக மக்களுக்கு இலவச லாந்தர் விளக்கு அளித்து ஒளி ஏற்றி வைக்க அண்ணா வழியில் அற நெறியில் நிற்கும் கழக அரசு முடிவு எடுத்திருக்கிறது என்பதை உளமார உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கருணாநிதியை கண்டித்து ராமதாஸ் பேட்டி

இருண்ட தமிழகத்தை மீட்க லாந்தர் விளக்கு கொடுத்து ஒளி ஏற்றி வைக்க முன் வந்த அரசு "டாஸ்மாக்" கடைகளை மூடியும், தமிழக மக்களுக்கு எண்ணை,திரி மற்றும் தீப்பெட்டி இலவசமாக கொடுக்கவும் முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

லாந்தர் ஊழல்: சுப்ரமணிய சுவாமி அறிக்கை

லாந்தர் வாங்குவதில் தமிழ் நாட்டில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இந்த விஷயத்தில் கனிமொழி பெரிய அளவில் கோடிக் கணக்கில் பணம் கையாடல் செய்ததாக சுப்ரமணிய சுவாமி அறிவித்தார். இதற்காக தி.மு.க அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சுப்ரமணிய சுவாமி ஒரு மன நோயாளி : கனிமொழி எம்.பி. அறிக்கை

தியாக உள்ளதுடன் மக்களுக்கு சேவை செய்து வரும் தமிழக முதல்வர் அவர்களை களங்கப் படுத்த வேண்டும் என்றே சு.சுவாமி அறிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவிற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் செயல்களில் இருந்தே அவர் ஒரு மன நோயாளி என்பது திட்ட வட்டமாகத் தெரிகிறது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை:

நான் அரசியலுக்கு வருவது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது ஆண்டவனுக்கே எப்படி தெரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. ஆண்டவனே நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் ஆண்டவன் ஆணையிட்டால் நான் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. இது தான் என் அரசியல் பிரவேசம் பற்றிய தெளிவான நிலை என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



காதலில் விழுந்தேன்: விஜய காந்த் பேட்டி

இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜய காந்த் கூறியது:
ஏழை மக்களுக்காக நான் கட்டிய கல்யாண மண்டபத்தை இடித்து என்னை அழிக்க நினைத்த இந்த அராஜக அரசு, என்னைக் கண்டு பயந்து நடுங்கும் இந்த அரசு, ஏழைப் பங்காளன் "சன்" தொலைக் காட்சி பாமர மக்களுக்காகவே தயாரித்த "காதலில் விழுந்தேன்" என்ற திரைக் காவியத்தை மதுரை மாநகரில் வெளியிட முடியாமல் தடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனால் நான் "சன்" தொலைக் காட்சி நிர்வாகத்துடன் கூட்டணி அமைத்து விட்டேன் என்றோ, விலை போய் விட்டேன் என்றோ நினைக்காதீர்கள்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

"பொடா" சட்டம்: அத்வானி பேட்டி

இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த பா.ஜ.க தலைவர் அத்வானி
"பா.ஜ.க" பாராளுமன்றத் தேர்தலில் வென்று தான் பிரதமர் பதவி ஏற்றவுடன் "பொடா" சட்டத்தை நிறைவேற்றி இந்தியப் பொருளாதரத்தை சீர்படுத்தி, தீவிரவாதத்தை ஒழித்து இந்தியாவை மீண்டும் "ஒளிரச் செய்வேன்" என்று கூறினார்.
மேலும் ஒரிசாவில் கிருஸ்துவர்கள் தாக்கப் படுவதை நிறுத்த "மோடி"யை ஒரிசாவின் முதல்வர் ஆக்கினால், ஒரிசாவில் கிருஸ்துவர்களே இல்லாமல் செய்து "டாட்டா"வோ, "பிர்லா"வையோ அவர்கள் வாழ்ந்த இடத்தில் தொழிற்சாலை அமைக்கச் செய்து ஒரிசாவை இந்தியாவின் முதல் மாநிலமாக மோடி மாற்றி விடுவார் என்றும் கூறினார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இந்தியா பொருளாதாரம்: சிதம்பரம் பேட்டி

இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலுவான நிலையில் உள்ளதாகவும் பொது மக்கள் பீதி அடையவேண்டாம் என்றும், இருபது வருடம் பொறுமையாக இருந்தால் பங்கு சந்தையில் மக்கள் இழந்த பணத்தை மீட்டு விடலாம் என்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். மேலும் அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கலுக்கு, இந்தியா பண உதவி செய்யும் நிலையில் உள்ளதாகவும், எதற்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ் எதிரொலி: பிரகாஷ் காரட் பேட்டி

கம்யூனிஸ்ட் ஆதரவு இருந்த வரை, மத்திய ஆட்சி சிறப்பாக நடந்து வந்தது. விலை வாசி உயர்வோ, பங்கு சந்தை விழ்ச்சியோ காணவில்லை. அமெரிக்க-இந்தியா அணு சக்தி ஒப்பந்தத்தால், உலகப் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்து விட்டது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால் உலகமே மகிழ்ச்சி அடையும் என்று கூறினார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx