திங்கள், 22 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 6


இன்று பதிவில் டெட் ராயிடில் நடைபெற்ற நவராத்திரி விழாவிலிருந்து ஒரு பாடலைக் கேட்டு மகிழ்வோம். GLAC என்ற அமைப்பு இந்த ஆண்டு நவராத்திரியைக் கொண்டாடவும், மிருதங்கக் கலைஞர் டாக்டர்  திருச்சி சங்கரன் அவர்கள் பெற்ற சங்கீத கலாநிதி விருதுக்காக அவரை கௌரவிக்கவும் வித்வான் மதுரை சுந்தர் அவர்களின் கச்சேரியை அக்டோபர் 6 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.  அந்த நிகழ்ச்சியில் மதுரை சுந்தர் அவர்கள் மிக நன்றாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அன்று அவர் பாடிய "பைரவி" ராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரிகளின் "காமாட்சி அம்பா" வைக் கேட்டு ரசிப்போம். குறிப்பாக இதில் திருச்சி சங்கரன் அவர்களின் சுகமான  தனி ஆவர்த்தனமும் இடம் பெற்றுள்ளது. ஜெய்சங்கர் பாலன் அவர்களின் வயலின் ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்தது.  சுந்தர் அவர்களின் சுந்தரமான மாணவர் (புகழ் பெற்ற Yale - இல் பட்டம்  பெற்று, கூகுளில் வேலை பார்க்கும ) சுதீர் ராவ் சுந்தர் அவர்களுடன் பின்னணியில் பாடினார்.


சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் அவர்களின் தனி ஆவர்த்தனம். கேட்டு மகிழ்வோம்.


1 கருத்து: