tag:blogger.com,1999:blog-1761389416114472267.post2420772830797268321..comments2023-10-22T03:54:04.837-04:00Comments on ஜன்னல் வழியே: புதிய எழுத்தாளர்கள் - ராஜகோபாலன் மற்றும் சுனில் கிருஷ்ணன் சிறுகதைகள்Anonymoushttp://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1761389416114472267.post-80659446755279906862013-08-09T13:39:12.200-04:002013-08-09T13:39:12.200-04:00நன்றி சுனில்.
மேலே சுட்டி தரப்பட்டுள்ள செகாவ் மே...நன்றி சுனில். <br /><br />மேலே சுட்டி தரப்பட்டுள்ள செகாவ் மேற்கோளுக்குச் சென்றால் அங்கே அவர் விமரிசகர்களை படு கேவலமாகத் திட்டியுள்ளார். என்ன செய்வது, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்! :)<br /><br />வலிய ஏற்படுத்திக் கொண்ட முனைப்புடன் யாரையும் எதையும் விமரிசிக்கவில்லை - இதில் உள்ள நியாய அநியாயங்களைப் பற்றி பேசும் தகுதியும் எனக்கில்லை.<br /><br />நன்றி, வாழ்த்துகள்.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-77992773944499167392013-08-09T12:07:43.361-04:002013-08-09T12:07:43.361-04:00பாஸ்,
காப்காவின் சம்சா மற்றும் வாசுவை தொடர்புபடுத...பாஸ், <br />காப்காவின் சம்சா மற்றும் வாசுவை தொடர்புபடுத்தியது குறித்து யோசித்து வருகிறேன். இது கதையை மேலும் நெருங்கி புரிந்துகொள்ள உதவும். நான் இந்த கதைக்கு சொப்பு எனப் பெயர் வைத்திருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், சொப்பு எனும் வகையில் இக்கதையை வாசித்தால் இது கிரேகர் சம்சாவின் கதை..ஆனால் வாசுதேவனான பின்னர் இது வேறு கதை ஆவதாக எனக்கு தோன்றுகிறது. அதுவே வாசுவிற்கும் சம்சாவிற்குமான வேறுபாடு என தோன்றுகிறது. மற்றபடி, இக்கதை எழுதியதன் வழியாக என்னை லகுவாக உணர்ந்தேன். இன்னும் மேம்பட்டு எழுதியிருக்கலாம் தான். எழுதுவது மட்டுமே என் கடமை. அது நிற்பதும் நிற்காமல் போவதும் அதன் சக்தியைப் பொருத்து. போக வேண்டிய தொலைவு நிறைய இருக்கிறது. suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-16118073827055340632013-08-08T20:19:26.571-04:002013-08-08T20:19:26.571-04:00நன்றி.
தரிசனம், உச்சம் இதையெல்லாம் தேடுவதற்கு நீங...நன்றி.<br /><br />தரிசனம், உச்சம் இதையெல்லாம் தேடுவதற்கு நீங்கள் சொல்வது போல் இந்தக் கதைகள் ஜெயமோகனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தளத்தில் இடுகையிடப்பட்டவை என்பது ஒரு காரணம் என்றால் மற்றொன்று அவரது தளத்தில் எழுதப்படும் இச்சிறுகதை விமரிசனங்களில் பெரும்பான்மையானவை இப்படிப்பட்ட விஷயங்கள் கதைகளில் இருக்கின்றன என்ற சொல்வதும்தான். அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியிருக்கிறது.<br /><br />நுகர்வுப் பொருட்கள் போல் முன்கூட்டியே தரநிர்ணயம் செய்து விலைப் பட்டி ஒட்டப்பட்டு இலக்கியப் படைப்புகள் சந்தைக்கு வருவதில்லை - எவ்வளவு பெரிய படைப்பானாலும் அது தொடர்ந்த வாசிப்புக்கும் விமரிசனத்துக்கும் உட்படுத்தப்படுகிறது என்பது மட்டுமே அதன் சிறப்பாக இருக்க முடியும், வேறெதுவும் அல்ல. புளகாங்கிதங்களும் உச்சிமுகர்தல்களும் அறிவுசார் இயக்கம் அல்ல.<br /><br />ஒருத்தர் எழுதிய கதையைப் போன்ற அதே பாணியில், மக்கள் வேறு முடிவு வேறு, என்று மட்டும் மாற்றி இன்னொருத்தர் எழுதினால் அதற்கு இலக்கிய மதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும் என்பது ரொம்ப அடிப்படையான பாலபாடம். அதைக்கூட யாரும் லட்சியம் செய்வதாகத் தெரியவில்லை. அதைவிட மோசம், நீங்கள் சொன்னதுபோல் இந்தக் கதைகள் நிச்சயம் ஜெயமோகன் முன்னர் தேர்ந்தெடுத்த நூறு கதைகளை இப்போது நூற்றுப் பன்னிரெண்டாக்கும் பட்டியல் அல்ல. ஆனால் பின்னூட்டங்களையும் விமரிசனங்களையும் பார்த்தால் இவையே முதல் பன்னிரெண்டாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது.<br /><br />தெரியாமல்கூட ஒத்திசைவு ராமசாமி அவர்கள் இந்தக் கதைகளையும் இதற்கு வந்துள்ள விமரிசனங்களையும் படித்துவிடக் கூடாது :)natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-56533075471145922832013-08-08T16:24:31.170-04:002013-08-08T16:24:31.170-04:00//ஏதோ ஒரு தரிசனத்தைக் காட்ட வேண்டும் என்றெல்லாம் ச...//ஏதோ ஒரு தரிசனத்தைக் காட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்வது எந்த அளவுக்கு சரி என்று யோசிக்க வேண்டும். வயலில் நெல்லுக்கு மட்டுமல்ல, புல்லுக்கும் இடமுண்டு//<br />நீங்கள் சொல்வது போல் எல்லாக் கதைகளிலும் தரிசனம் எதிர் பார்ப்பது தவறு என்பது உண்மை தான். ஆனால் அதை எங்கு எதிர் பார்க்கிறோம். எல்லாக் கதைகளிலும் இல்லை. அதற்கான சில கதைகள், எழுத்தாளர்கள், இதழ்கள் என வரையறுத்துக் கொள்கிறோம். இந்தக் கதைகள் ஜெமோ வின் சிபாரிசில் வந்தவைகள். அதனால் கவனம் பெறுகிறது.எனவே அதை சற்று உள்னோக்கிப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. விளையாடுவது ரஞ்சியா அல்லது டெஸ்ட் மாட்சா?<br /><br />//ஆழங்கள், உச்சங்கள், தரிசனங்கள். தனி மனித உணர்வுகளுக்கும் தனித்தன்மைகளுக்கும் இலக்கியத்தில் இடமேயில்லை என்று முடிவாகிவிட்டதா என்ன?//<br /><br />தனி மனித உணர்வுகள் உச்சத்தை அடையும் போது ஏற்படும் உணர்வு சொல்ல முடியாது. எது இலக்கியம் என்பதெல்லாம் அவரவர்கள் தேடுதலில் கண்டடைவது.<br /><br />//ஒரு பிற்போக்குக் கருத்தை இந்தக் கதை முன்னிலைப்படுத்துகிறது என்பதாக ஒரு கண்டனம்//<br /><br />பிற்போக்கு, முற்போக்கு ஒரு பிரச்சனையேயில்லை. என் புரிதலில் பெண் கற்பழிப்புக்குப் பதில் எந்த குற்றத்தையும் போட்டுக் கொள்ளலாம். அது உச்சத்தைக் கொடுக்காது. ராதா கிருஷ்ணன் பேசுவதோடு கதை முடிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அது கதாசிரியரின் விருப்பம்.<br /><br />வாசுதேவன் கதையைப் பொறுத்த வரை புரிதலில் நமக்குள் பெரிய வித்தியாசம் இல்லை. <br />Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.com